கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியஜோய் (67) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இளைய மகன் பெயர் சந்தோஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகிய சைனி மோள் (35) என்ற மனைவி இருக்கிறார்.

இவருக்கும் மரியஜோய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ நாளிலும் மாமியார் மற்றும் மருமகள் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் மருமகள் மாமியாரை மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

அதோடு அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து தன் மாமியார் மீது அவர் ஊற்றியதோடு கையால் முதுகில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாமியாரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பிய நிலையில் பின்னர் தன் மருமகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது