1980இல் துவங்கப்பட்ட பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் இருந்தார். இதையடுத்து அக்கட்சி முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் 1984இல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி வெறும் 2 தொகுதிகளில் வென்றது. குஜராத்தில் ஏ.கே. பாட்டீல் என்பவரும், ஆந்திராவில் ஜங்கா ரெட்டி என்பவரும் வென்றனர். இதுபோல 2 தொகுதிகளில் மட்டுமே வென்று கணக்கை ஆரம்பித்து, தற்போது 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைத்துள்ளது.