தமிழகத்தில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அதாவது மும்மொழி கல்வி கொள்கை மற்றும் தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மொத்தம் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவைகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் அதிமுக, தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகமும் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் முன்னதாக அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் கலந்து கொள்வதாக செய்தி வெளியான நிலையில் தற்போது புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.