
ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆதிண்டா என்பவரும் ஏ கே என்பவரும் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்த நிலையில் நேரில் பார்ப்பதற்கு முடிவு செய்தனர். அப்போது ஆதிண்டா முகத்தை மறைத்து முஸ்லிம்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்துள்ளார். ஆனால் ஏகே இதை சந்தேகமாக பார்க்கவில்லை. இந்த உறவு தொடர்ந்து நிலையில் இறுதியில் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஆதிண்டா திருமணத்திற்கு பிறகும் மாதவிடாய் மற்றும் பல்வேறுபட்ட காரணங்களை கூறி தனிமையில் இருப்பதை தவிர்த்து வந்துள்ளார்.
திருமணம் ஆகி 12 நாட்கள் கடந்தும் இந்த நிலை தொடர்ந்ததால் சந்தேகம் கொண்ட ஏகே ஆதிண்டா குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது தான் அவர் ஒரு பெண் இல்லை அவர் ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்தப் ஏகே காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறை குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஆதிண்டா ஒரு ஆண் இவர் கடந்த 2020 ஆம் வருடம் பெண் போல ஆடை அணிந்து பெண் போல நடந்து கொள்ள ஆரம்பித்தார். இவருடைய குரல் பெண் போல இருந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. சொத்துகளுக்கு ஆசைப்பட்டு இவர் இப்படி ஒரு நாடகம் போட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவருக்கு நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.