அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு கலந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் பலரும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். அதன் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் அதற்கு முன்பாக இரண்டாம் பருவ தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். அதனுடன் அரியர் பாடத்திற்கான தேர்வுகளும் சேர்த்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்த நிலையில் முதலாம் ஆண்டு அரியர் பாட தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை நடைபெற இருந்த முதலாம் ஆண்டு அரியர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் முதல் பருவ தேர்வுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியான பிறகு அரியர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது