தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காங்., முன்னாள் எம்பி ஷங்கர் பண்ணு, காங்., முன்னாள் எம்எல்ஏ ஜேபி சண்டேலியா ஆகியோர் இன்று கட்சியில் இருந்து விலகிய நிலையில், பாஜகவில் இணைந்துள்ளனர். தேர்தலில் சீட் கொடுக்காததால் இவர்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது