கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆணையங்குப்பம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு 17 வயதில் சந்திர யோகேஷ் என்ற மகன் இருந்துள்ளான்.

இதில் சந்திர யோகேஷ் ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்குவதற்காக சென்றுள்ளார். ஆனால் நேற்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் சிறுவன் கீழே வராததால் பெற்றோர் சந்தேகம் அடைந்து மாடிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது சிறுவன் முகத்தில் பாலித்தீன் பை கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிறுவன் முகத்தில் பாலித்தீன் பையை கட்டிக்கொண்டு பின்னர் விஷ ஷ்ப்ரேவை முகத்தில் அடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

அந்த சிறுவன் விஷ ஸ்ப்ரேவை அறை முழுவதும் அடித்த நிலையில் சிறுவனின் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சிபிஎஸ்இ பாடங்கள் கடினமாக இருப்பதால் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் உள்ள ஆதாரங்களும் அழிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.