
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் இல்லத்தில் இன்று சிறப்பு விருந்து நடைபெறும் நிலையில் மோடி அதில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் குடியரசு தலைவருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் அவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.