மியான்மரின் மையப் பகுதியில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும் என அமெரிக்க புவியியல் ஆய்வகம் (USGS) மதிப்பீடு செய்துள்ளது.

பொருளாதார இழப்பின் விவரங்களில், $100 பில்லியனைத் தாண்டும் வாய்ப்பு 33% என்றும், $10 முதல் $100 பில்லியன் வரையிலான இழப்பு ஏற்படும் வாய்ப்பு 35% என்றும் தெரிவித்துள்ளது. இது மியான்மரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கூட மீறக்கூடிய அளவில் இருக்கலாம் என USGS எச்சரித்துள்ளது.

மியான்மர் இராணுவ அரசின் தகவலின்படி, சனிக்கிழமை வரை குறைந்தது 1,002 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மியான்மரை தவிர, பாங்காக்கிலும் 10 பேர் வரை உயிரிழந்ததாகவும், இந்த நிலநடுக்கம் ஒரே நேரத்தில் பல நாடுகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.