சிதம்பரம் அருகே மின்வாரிய துறையின் அலட்சியத்தால் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மாடு உயிரிழந்தது

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கிராம பகுதியில் இருக்கும் வயல்வெளியில் விவசாயியான திருநாவுக்கரசு என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மாடு மிதித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி திருநாவுக்கரசு கூறும்போது, மின்சார ஒயர்கள் தாழ்வாக செல்வதால் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறுகிறது. எனவே மின்வாரியத் துறையினர் அலட்சியம் காட்டாமல் தாழ்வாக போகும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்த மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார்.