இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் இந்திய வீரர்கள் 366 பேர்.

வெளிநாட்டு வீரர்கள் 208 பேர். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 81 வீரர்கள் அடிப்படை தொகையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்துள்ளனர். இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல் அணி வாங்கியது.