அயர்லாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர், வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்கள் ஏன் மீண்டும் தாயகம் திரும்புவதில்லை என்பதற்கான முக்கிய காரணங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அங்கே நிலவும் “வேலை-வாழ்க்கை சமநிலை” தான் இதற்கு முதன்மைக் காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக, மாலை 6 மணிக்கு மேல் அலுவலக அழைப்புகளை ஏற்பதோ அல்லது வேலை செய்வது குறித்த எதிர்பார்ப்புகளோ அங்கு கிடையாது.
இந்த முறையான பணி நேரம், ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்தினருடன் செலவிடவும் போதிய அவகாசத்தை அளிக்கிறது, இதுவே பலரை அங்கே தொடர வைக்கிறது. மேலும், அங்கிருக்கும் பணி கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் உரிமைகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை, இந்தியர்களைப் பெரிதும் ஈர்க்கிறது.
மேலும் இந்தியாவில் வேலையில் இருக்கும்போது தனிப்பட்ட நேரத்திலும் வேலை குறித்த அழுத்தங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், வெளிநாடுகளில் பணி நேரம் முடிந்தவுடன் அலுவலகத் தொடர்புகள் துண்டிக்கப்படுவது மன அழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளார். இத்தகைய ஆரோக்கியமான பணி சூழலும், சுதந்திரமான வாழ்க்கை முறையுமே பல இந்தியர்கள் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்புவதைத் தவிர்க்
View this post on Instagram
“>கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
