குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் 95 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக அந்த மூதாட்டியை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூதாட்டியை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் நிலத்தடி நீர் தொட்டியில் மூதாட்டியின் சடலம் கிடந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.