
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதி அருகே ஒரு மாணவி முதுநிலை படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் அவருக்கு பெற்றோர் வீட்டில் திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர். ஆனால் அந்த மாணவிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் இன்ஸ்டாகிராமில் குட் பை அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என பதிவிட்டு மாத்திரைகளின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு கடந்த 16ஆம் தேதி இரவு 7:42 மணியளவில் பதிவிடப்பட்டது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு உடனே எச்சரிக்கை சென்றது. இது தொடர்பாக மெட்டா நிறுவனம் மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீஸ் டிஜிபி சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவலை கொடுத்துவிட்டு மாணவிக்கும் கவுன்சிலிங் வழங்கினர்.
மேலும் குடும்பத்தினரும் தற்போது மாணவியின் மன குமுறலை தெரிந்து கொண்டு அதனை சரி செய்ய முன்வந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.