
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், 55 வயதுடைய நபர், தனது மகனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 வயதுடைய வருங்கால மருமகளை காதலித்து பின்னர் திருமணம் செய்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தானா போட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. ஒருவர் தனது மகனுக்காக திருமண ஏற்பாடுகளை கடந்த ஆண்டு செய்திருந்தார். ஆனால், தந்தை–மருமகள் இடையே காதல் மலர்ந்தது.
திருமண நாள் நெருங்கிய போது, தந்தை தனது மகனுக்குப் பதிலாக மருமகளை காரில் அழைத்துச் சென்று டெல்லியில் திருமணம் செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியான சம்பவம், எட்டு நாட்களுக்குப் பிறகு, இருவரும் திரும்பி வந்தபோது தெரிந்தது. இதனால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து, கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தில், குடும்பத்தின் அழுத்தத்தின் பேரில் மாமனார்–மருமகள் ஜோடி கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது, இருவரும் ஷாஜகான்நகர் பகுதியில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.