வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(69). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குணசேகரன் வீட்டில் மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து மான் தோலை வாங்கி அதனை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். பின்பு அந்தத் தோலை மாந்திரீகம் செய்யும் நபர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து வேலூர் மாவட்ட சரக வனத்துறையினர் மான் தோலை விலைக்கு வாங்க வந்த வியாபாரிகள் போல் ஏமாற்றி குணசேகரிடம் பேசி உள்ளனர். அப்போது குணசேகரன் மான் தோலை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் குணசேகரனை கைது செய்த போலீசார் அவர் வீட்டில் பதப்படுத்தி பதுக்கி வைத்திருந்த மான் தோலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குணசேகரன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவருக்கு 1 லட்சம் அபராதம் விதித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.