
மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 6 பேரும் போட்டியின்றி தேர்வாகும் நிலையில் வருகிற ஜூன் 13ஆம் தேதி வெற்றி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
10 எம்எல்ஏக்களின் கையொப்பம் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்ட 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.