
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடந்து முடிந்தது. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் விஜய் என்னவெல்லாம் பேசப்போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் தனது எழுச்சிமிக்க பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார்.
ரசிகர்களுக்கு கைகாட்டியபடியே நடந்து வந்த விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றினார். அதன் பிறகு விஜய்க்கு வீர வாள் பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடு முடிந்த பிறகு விஜய் தனக்கு பரிசாக கொடுக்கப்பட்ட புத்தகங்களை கையோடு எடுத்துச் சென்றார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram