
மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 54 வருடங்களின் விலை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய சிட்டாக்ளிப்டின், லினாக்ளிப்டின், மெட்ஃபோர்மின் ஆகிய மாத்திரைகளின் விலை 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய ப டெல்மிசார்டன், குளோர்தாலிடோன் மற்றும் சில்னிடிபைன் மாத்திரையின் விலை ரூ.7.14 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.