இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைக்க விரும்புவர்கள் போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் தனியாக அதிகபட்சம் ஒன்பது லட்சம் ரூபாய் வரையும், கூட்டு கணக்கில் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையும் டெபாசிட் செய்யலாம்.

இதற்கான முடிவு காலமான ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் டெபாசிட் செய்த தொகைக்கான வட்டியை மாத வருமானமாக நீங்கள் பெற முடியும். அதனைப் போலவே திட்டம் உதிர்வடைந்த உடன் பணத்தை பெற வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் 9 ஹலோலட்சத்தை டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் 5,500 ரூபாய் வருமானமும், கூட்டுக் கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்தால் 9250 வருமானமும் பெறலாம். ஆனால் திட்டம் முதிர்வடைவதற்கு முன்பாக டெபாசிட் செய்த தொகையை நீங்கள் பெற விரும்பினால் வைத்து தொகையிலிருந்து ஒரு சதவீதம் கழித்த பிறகு மீத பணம் திரும்ப வழங்கப்படும்.