நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி செயல்பட்டு வருகின்றது. இதில் தங்கள் வாடிக்கையாளரின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்கள் உள்ளன. மிகவும் பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் lic திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சாரல் பென்ஷன் என்ற ஒரே ஒருமுறை மட்டுமே ப்ரீமியம் தொகை செலுத்தும் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சிங்கிள் லைப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் என்ற இரண்டு வகையான பலன்களை இதில் தேர்வு செய்து கொள்ள முடியும். 10 லட்சம் டெபாசிட் செய்தால் வருடத்திற்கு 50 ஆயிரத்து 250 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். இதன் மூலமாக குறைந்தபட்சம் மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம். டெபாசிட் செய்த ஆறு மாத காலத்திற்குப் பிறகு இதிலிருந்து லோன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.