தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இது ‌8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் நாகையிலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டிற்கு ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக அரியலூர் ‌ மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு விடுமுறை. மேலும் இதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.