உலகம் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவும் DeepSeek, Qwen போன்ற ஏ.ஐ கருவிகளை உருவாக்கி நாடு முழுவதும் பயனில் கொண்டு வந்துள்ளது.

தற்போது, சீனாவில் 1.3 கோடி பள்ளி மாணவர்கள் எழுதும் தேசிய பொதுத்தேர்வு – கோவ்காவ் தேர்வை முன்னிட்டு, ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்தி தேர்வில் ஏமாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகியதால், Doubao (ByteDance), Yuanbao (Tencent), Qwen (Alibaba), Kimi (Moonshot) மற்றும் DeepSeek உள்ளிட்ட ஏ.ஐ. சேவைகள் தேர்வு நேரங்களில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவை tech நிறுவர்கள் திட்டமிட்டே செயல்படுத்தியுள்ளார்கள். DeepSeek, “தேர்வின் நேர்மையை பாதுகாக்கும் வகையில், சேவை தேர்வு நேரத்தில் கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளது. Doubao செயலியில் கூட, ஒரு நபர்  கேள்வி கேட்ட போதும் “தேர்வு காலத்தில் சேவை இல்லை” என்ற பதில் வந்தது.

இந்த முடக்க நடவடிக்கைகள், லென்ஸ்கார்ட் தயாரிப்புத்துறைத் தலைவர் ராகுல் ரூபானியின் லிங்க்ட்இன் பதிவுக்குப் பிறகு பரவலாக வெளிவந்தன. இதனால் பல மாணவர்கள் ஏ.ஐ உதவிகளை இழந்து, தேர்வுக்கு  AI இல்லாமல் தயாராக கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சீன அரசு தேர்வின் நேர்மையை உறுதி செய்ய பல நவீன கண்காணிப்பு முறைகளையும் வந்துள்ளது. ரேடியோ சிக்னல் தடுப்பு, பையோமெட்ரிக் அடையாளச் சரிபார்ப்பு, மொபைல் சோதனை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நடந்த விதிமீறல்களை தேர்வுக்குப் பின் பரிசீலித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நகரங்களில் மாணவர்கள் தேர்வுக்கு நேரத்தில் செல்வதற்காக அலுவலக நேரம் மாற்றப்பட்டதுடன், பொது நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது சீன அரசு, கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை  இந்த சம்பவம்  காட்டுகிறது.