சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் கவிதை மில்லத் தெருவில் சுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக ஜெயலஷ்மி நகர் பகுதியை சேர்ந்த உடல் நலம் சரியில்லாத பாக்கியலட்சுமியை சுந்தரி கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற சுந்தரி மாலை நேரத்தில் மாடிக்கு சென்ற மாங்காய் பறித்துள்ளார்.

அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததால் சுந்தரியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுந்தரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.