தேமுதிக தலைவரும் பிரபல நடிகரமான விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு திரை உலகத்தினர் அரசியல் பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் தனது ரத்தத்தில் விஜயகாந்தின் உருவப் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் இளைஞரின் நண்பர்களும் இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று கேப்டன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.