
பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் நடந்த காதல் திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கணவரை விட்டு, தனது சொந்த மருமகனை காதலித்து திருமணம் செய்த பெண்ணின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர்களின் காதல் மற்றும் திருமண நிகழ்வு கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கும், சர்ச்சைக்கு இடமாகவும் மாறியுள்ளது.
இந்த பெண் – ஆயுஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார் – ஏற்கனவே திருமணமான இவருக்கு, ஒரு மகன் இருக்கிறார். ஆனாலும், தன் கணவனும், மாமியாரும் தன்னை உடல் மற்றும் மனதலவில் சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “நான் என் கணவரை ஒருபோதும் நேசிக்கவில்லை; என் குடும்பமே இந்த திருமணத்தை கட்டாயமாக நடத்தியது. ஆனால் என் மருமகனுடன் பேசத் தொடங்கியபின் தான் உண்மையான காதல் எனக்கு கிடைத்தது” என தெரிவித்தார்.
இந்தக் காதல் இருவருக்கும் நெருக்கமாக வளர்ந்ததால், தனது கணவரை விட்டு, மருமகனை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்தார். இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர்கள் இருவரும் பஞ்சாயத்தில் தங்கள் உறவை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும், “ஒன்றாக வாழ்ந்து இறப்போம்” என சத்தியம் செய்து வாழத் தொடங்கியுள்ளனர்.
திருமணத்திற்குப் பின், ஆயுஷி பதிவிட்ட ஒரு ரீல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர் பாடலுக்கு உதட்டுச்சாயம் பூசிக்கொண்டிருக்க, ஒருவர் “தேனிலவுக்குத் திட்டம் என்ன?” என கேட்டுள்ளார். அதற்கு அவர், “யாராவது நம்மை வாழவைத்தால்தான் தேனிலவுக்கு போவோம். எங்களை இப்படி தொந்தரவு செய்தால், நாங்கள் விஷம் குடித்து இறந்து விடுவோம். ஆனால் எப்போதும் இறக்க நினைக்கல” என ஆவேசமாக பதிலளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு நிலைகளில் விவாதிக்கப்படுகிறது.
बिहार के जमुई में भतीजे से शादी करने वाली चाची एक बार फिर सुर्खियों में हैं। अब दोनों का एक नया वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें वे काफी खुश नजर आ रहे हैं।#Bihar #Jamui pic.twitter.com/W4qHfDDJ7m
— NBT Bihar (@NBTBihar) June 28, 2025