
இஸ்ரேல் ஹமாஸ் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் காசாவில் உள்ள மருத்துவமனையில் குண்டு வெடித்ததில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கு முற்றிலுமாக அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு யார் காரணம் என்பது பற்றி தேசிய பாதுகாப்புக் குழு விசாரணை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குண்டுவெடிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை சேகரிக்க ஜோ பைடன் உத்தரவிட்டதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிருப் தெரிவித்துள்ளார்.