
பிரதமர் நரேந்திர மோடி வனஜீவி ராமையாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கம்பம் மாவட்டத்தை சேர்ந்த இவர் லட்சக்கணக்கான மரங்களை காக்க தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் இன்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இவருக்கு 87 வயது ஆகிறது. இவர் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
இவர் இயற்கையை விரிவுபடுத்துவதற்காக ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவருடைய மறைவுக்கு தெலுங்கானா மாநில முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பூமிப்பந்தை பசுமை கோளாக மாற்றிய இவருடைய வாழ்க்கை என்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் அவரைப் பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.