மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை நேற்று அக்கட்சி சமூக வலைத்தகளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி வீடு திருப்பிய நிலையில் வீட்டிற்குள் தடுமாறி விழுந்ததில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டுள்ளது. மேலும் தலையில் கட்டுடன் வீல் சேரில் அவர் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.