
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதோடு எதிர்க்கட்சிகள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வருதோடு இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும் விமர்சிக்கிறார்கள்.
இந்நிலையில் அம் மாநில அமைச்சர் உதயன் கூஹாவின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்தால் அவர்களின் விரல்கள் உடைக்கப்படும். இவர்களை கண்டறிந்து உடனடியாக தண்டனை கொடுக்காவிட்டால் வங்கதேசத்தை போன்று மேற்கு வங்கத்தையும் ஆக்கி விடுவார்கள். பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது சம்பந்தப்பட்ட மருத்துவமனை சூறையாடப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கூட துப்பாக்கி சூடு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறினார்