
திருநெல்வேலி மாவட்டம் கொம்பதானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்(43). இவர் கடந்த 1-ம் தேதி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த சந்தனகுமார்(28) மற்றும் மற்றொரு நபர் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.
அதனை பார்த்த ராஜனின் மனைவி பிச்சம்மாள் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது பிச்சம்மாளை பெண் என்றும் கூட பார்க்காமல் சந்தனகுமாரும் அந்த நபரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தனகுமார் உட்பட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று சந்தனகுமாரை கைது செய்த போலீசார் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.