கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது ஒரு வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளது. மனைவியை பேய் என்று அழைப்பதை கொடுமையாக கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு விசித்திரமான வழக்கில், மனைவியை பேய், பிசாசு என்று அழைப்பதை கொடுமையாக பார்க்க முடியாது என பாட்னா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐபிசி 498ஏ பிரிவின் கீழ் கணவருக்கு எதிரான கொடுமை குற்றச்சாட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் பெண்ணின் கணவர் நரேஷ் குமார் குப்தா மற்றும் மாமனார் சஹதேவ் குப்தா ஆகியோருக்கு பாட்னா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.