திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்வதை பலாத்கார குற்றம் ஆக்குவது குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்று  அனுப்பியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் மனைவி மைனர் அல்லாத பட்சத்தில் அவரது விருப்பமின்றி கணவர் உறவு வைத்துகொள்வது வன்கொடுமையாகாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோன்ற தீர்ப்பை கர்நாடக நீதிமன்றமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.