
இந்தியாவின் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது பிரதமராக 3-வது முறை மோடி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி மற்றும் நேரம் போன்றவைகள் குறித்து பார்ப்போம். அதன்படி ஜூலை 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதி உரையாற்றுவார். இந்த முறை பொருளாதார வளர்ச்சி, நுகர்வு, வரி சீர்த்திருத்தங்கள், தொழிலாளர்கள் நலனை அதிகரித்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை காணவேண்டும் என்பதுதான் இந்த முறை பட்ஜெட்டின் கருப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.