முதல்வர் ஸ்டாலினை கோழை என்று விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினை கோழை என்று விமர்சித்திருந்தார். இதற்கு திமுகவினர் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை கோழை என்று விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பான செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டி இடுவது கோழையா? அல்லது மாநில உரிமைக்காக சவால் விடுவது கோழையா? மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால் விடும் முதலமைச்சரை கோழை என்பதா? முதல்வரை கோழை என்பவர்கள் கோழை என்பதற்கு அர்த்தம் தெரியாத நபர்களாகத்தான் இருக்க முடியும். மாநில உரிமைக்கு குரல் கொடுக்கும் இரும்பு மனிதர் முதல்வர் ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.