உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மத்திய அமைச்சரின் உறவினர் ஒருவர் தம்பதியினரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மத்திய அமைச்சர் சோமேந்திர தோமரின் உறவினரான நிகில் தோமர் பிப்ரவரி 22 அன்று தனது காரில் இருந்து இறங்கி நேரடியாக அந்த தம்பதியை தாக்க தொடங்கினார்.

இதற்கு  பதிலடி கொடுக்கும் விதமாக அந்த தம்பதியினரும் நிகில் தோமரை எதிர்த்து போராடினர். மூவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து நிகில் தோமர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்ட தகராறு முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்து இறுதியில் அடிதடியில் முடிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.