மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது. அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் காலை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். டோக்கன்களில் முறைகேடுகளை தவிர்க்க qr கோடு இணைப்புடன் டோக்கன் வழங்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.