மணிப்பூரில் குகி – மெய்தி மக்களிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக வெடித்து மே மாதம் முதல் தற்போது வரை நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொடர்ந்து கைது சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூர் கவர்னர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு காணொளியில் வந்த இரண்டு பெண்களை சந்தித்த கவர்னர் அனுசியா உகேய் அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக வழங்கியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதி உதவியை செய்து கொடுப்பதோடு அவர்களுக்கு உறுதுணையாகவும் இருப்போம் என கவர்னர் தெரிவித்துள்ளார்.