தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகர்களில் ஒருவர் தான் அசோக்செல்வன். இவர் இப்போது “போர் தொழில்” திரைப்படத்தில் நடித்து உள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்டில் வெளியான இந்த படத்தில் சரத்குமார், நிகிலா விமல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச் செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இத்திரைப்படம் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போர் தொழில் படம் பற்றி நடிகர் விஷ்ணு விஷால் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது “ராட்சசனை மிஞ்சிவிட்டதா..? படம் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். பின் அசோக்செல்வன் கூறியதாவது, மச்சி.. அதற்கு பதில் கூறும் சரியான நபர் நீ தான். நீயே பாத்துட்டு சொல்லு. நன்றி டா. வாழ்த்துக்கள்! என குறிப்பிட்டுள்ளார்.