டெல்லியில் புதிதாக அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பல எதிர்ப்புகளுக்கு பிறகு கலந்த 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் நினைவாக தபால் தலை மற்றும் 75 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மக்கள் சுற்றி பார்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த பார்லிமென்டை பொதுமக்கள் இணையத்தில் முன் பதிவு செய்து பார்க்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. கூட்டம் நடைபெறாத சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை மக்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.