தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை: அன்னவாசல், அண்ணாபண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர்: காங்கேயம், சிவன்மலை ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கேயம் திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பாளையங்கோட்டை சாலை, அகஸ்தலிங்கம் பாளையம், அர்த்தனாரிபாளையம், பொத்திய பாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலை பாளையம், ராயல்வலசை, கோவில்பாளையம், காமாட்சிபுரம் பெருமாள்மலை, சாவடிப்பாளையம், டி.ஆர். பாளையம், ஜி.வி பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோஸ் கார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார் பாளையம், வளையங்காட்தோட்டம், ஜே.ஜே.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீர்த்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தேனி: உத்தமபாளையம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 4 மணி வரை உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, கருக்கோடை, ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர்: ராஜபாளையம் அருகே ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துசாமிபுரம், கங்கா குளம் எதிர் கோட்டை, கொங்கன்குளம், மம்சாபுரம், சிவலிங்கபுரம், அருணாச்சலபுரம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

நெல்லை: அம்பை மேற்கு பீடரில் இன்று (சனிக்கிழமை) உயர் அழுத்த மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அம்பை நகர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் தெரு, பண்ணைசங்கரய்யர் நகர், கீழப்புதுத்தெரு, மேலபுதுத் தெரு, அகஸ்தியர் கோவில் மெயின் ரோடு, சந்தை பஜார், அய்யனார் குளம் தெரு வசந்தம் கல்யாண மண்டபம் பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்தடை ஏற்படும்.