தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 7-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்பிறகு கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான தூரல் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காலை நேரத்தில் பனி நிலவும். இங்கு அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.