தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.