
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை பனிமூட்டம் காணப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலை பகுதிகளில் இரவு நேரங்களில் உரைபனி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் வருகிற 8-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.