இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவருக்கு மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வந்தது. இந்த தகவலை மத்திய அரசின் PIB FACT check பக்கம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது பொய்யான செய்தி என்றும் இப்படியான தகவல்களை பிறருக்கு பகிர வேண்டாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான பொய் செய்திகளை கொண்டு மோசடி நடைபெறுவதாகவும் அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.