தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரையில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும்.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.