சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு இன்று 10 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.