தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள நீர்நிலைகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என நகரவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழையின்போது குப்பைகள் தண்ணீர் செல்வதை தடுக்கிறது; இதனால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்புள்ளது என கூறினார். மேலும் இதனை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.