ஆர்டிஇ எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயைத் தனியார் பள்ளிகளுக்குத் தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதைக் கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி ஆசிரியர்களும், நிர்வாகிகளும் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன் வரும் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்துவதில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.