
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகவியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த நபர் தனது மனைவி சாவித்திரியை உடலுறவுக்கு அழைத்தார். அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த நபர் தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாவித்திரி தனது கணவரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு அவரது உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி விளைநிலத்தில் புதைத்து விட்டார். இந்த நிலையில் விலை நிலத்தில் உடல் இருப்பதை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாவித்ரியை கைது செய்து விசாரித்த போது உண்மை தெரியவந்தது. தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றதால்கணவரை கொலை செய்ததாக சாவித்திரி ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.